top of page

தண்ணீர் தகராறை தீர்த்தல்: கருக்காகுளத்தில் பாசனப் பிரச்சினையைத் தீர்க்க ADR ஐப் பயன்படுத்துதல்

Updated: Nov 22, 2023

71 வயதான ஆசீர்வாதம் சபரிமுத்து, 71, கருக்காகுளத்தில்[1] உள்ள அவரது கிராமத்தின் 'கமவிதானையர்' அல்லது 'நெல் அதிகாரி' என்று உள்ளூரில் மற்றும் தொழில் ரீதியாக அறியப்படுகிறார். இங்கே அவர் தனது மனைவி மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசிக்கிறார், மேலும் SEDR இன் கூட்டாளர் நிறுவனங்களில் ஒன்றான FIRM அமைப்பு மேற்கொண்ட செயற்திட்டமொன்றில் பயனாளிகள் மற்றும் பங்கேற்பாளர்களில் ஒருவராக இருந்தார்.

FIRM இன் தலையீடுகளில் ஒன்று, கமநல அபிவிருத்தித் திணைக்களத்துக்கு (DAD) சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து தனது வேலி வரிசையை நீட்டிக்க ஒரு விவசாயி எடுத்த முடிவினால் எழும் சமூகப் பிரச்சினையைத் தீர்ப்பதை மையமாகக் கொண்டது. இந்த நடவடிக்கையானது 2017 ஆம் ஆண்டு முதல் கீழ்நிலை நீரின் இயற்கையான ஓட்டத்தைத் தடுத்து, அண்டை விவசாயிகளின் நெல் நிலங்களுக்கு தேவையான முறையான நீர்ப்பாசனத்தை பறித்தது. காலப்போக்கில், நீர்ப்பாசன வாய்க்கால் சிதிலமடைந்தது, கட்டுப்பாடற்ற நீர்ப்பாசனம் காரணமாக வேலனங்குளம் குளத்தைச் சேர்ந்த சுமார் 150 ஏக்கர் நெற்பயிர் பாதிப்புக்குள்ளானது. மேலும் சபரிமுத்துவின் தொழில், சுற்றியுள்ள வயல் நிலங்களுக்கு தண்ணீர் வருவதைக் கட்டுப்படுத்துவதையும் உள்ளடக்கியதால், அண்டை விவசாயிகளால் நெல் சாகுபடிக்கு நீர் வரத்து இல்லாதது அல்லது அதிகப்படியான நீர் வரத்து குறித்து அவருக்கு வந்த பல புகார்களால் அவர் விரக்தியடைந்தார்.


ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் DAD க்கு சொந்தமானதாலும், எனவே திணைக்களம் மற்றும் ஆக்கிரமித்த விவசாயி இடையே பிரச்சினை தீர்க்கப்பட வேண்டியிருந்ததாலும், பிணக்கை அரசு சாற்பற்ற தரப்பினர்களுக்கு இடையேயான தனிப்பட்ட பிணக்குகளை மட்டுமே கையாள அனுமதி இருந்த உள்ளூர் சனசமூக மத்தியஸ்த சபைக்கு கொண்டு செல்ல முடியாது இருந்தது. பிரச்சினை முடிவுக்கு வர வேண்டுமானால், குறைந்த வளங்கள் கொண்ட DAD, கடினமான மற்றும் நீண்ட, முறையான நீதிமன்ற நடைமுறைக்கு உட்படுத்தப்படுவதை இது குறிக்கிறது. எனவே, 2017 ஆம் ஆண்டிலிருந்து எந்தப் பரிகாரமும் எடுக்கப்படவில்லை, மேலும் கருக்காகுளத்தில் உள்ள இந்த விவசாய சமூகத்திற்குள் மனக்கசப்புகள் (சமூக அளவிலான ஒரு விரக்தியுடன் இணைந்து) வளர்ந்தன.


எவ்வாறாயினும், 2021 ஆம் ஆண்டு SEDR நிதியுதவியுடன் FIRM ஆல் செயல்படுத்தப்பட்ட திட்டம் தொடங்கப்பட்டது, அங்கு உள்ளூர் இளைஞர் குழுக்களைத் தேர்ந்தெடுத்து மாற்றுவழி பிணக்குத் தீர்வில் (ADR[2]) விரிவான பயிற்சி அளிக்கப்பட்டது. நடைமுறை அமர்வுகள் மற்றும் நிபுணர்கள் மற்றும் கள ஊழியர்களின் வழிகாட்டுதலின் மூலம், இளைஞர்கள் தங்கள் சமூகங்களுக்குள் உள்ள பிணக்குகளை அடையாளம் காணவும், குறிப்பிட்ட சமூக துவக்கப் பணிகள் மூலம் தொடர்புடைய பங்குதாரர்களுடன் கூட்டாக அவற்றைத் தீர்க்கவும் பயிற்சியளிக்கப்பட்டனர். அதேபோன்று, மன்னாரைப் பொறுத்தமட்டில் வளர்மதி சனசமூக நிலையத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இவ்வாறு பயிற்சியளிக்கப்பட்டு மீண்டும் கருக்காகுளம் போன்ற கிராமங்களுக்கு அனுப்பப்பட்டனர். ஒரு இளைஞர் குழு சபரிமுத்துவையும் அவரது விவசாய அமைப்பையும் சந்தித்தது, அதன்பிறகு, விவசாயிகளின் பாசனப் பிரச்சனை தொடர்பாக அறிந்துகொண்டனர். இந்தப் பிரச்சினையைத் தீர்க்கும் முயற்சியில், பயிற்சி பெற்ற இளைஞர்கள், விவசாயிகள் அமைப்பு மற்றும் நிலத்தை ஆக்கரமித்த விவசாயிக்கு இடையே (FIRM மூலம் எளிதாக்கப்பட்ட) தொடர்ச்சியான ஆலோசனைகள் நடத்தப்பட்டன.

இளைஞர் குழுவின் உறுப்பினர்கள் தங்கள் ADR அறிவு மற்றும் திறன்களைப் பயன்படுத்தி நடாத்திய பல பேச்சுவார்த்தைகள் மற்றும் ஆலோசனைகளுக்குப் பிறகு, நிலத்தை ஆக்கிரமித்த விவசாயி இறுதியில் நிலத்தை விட்டுக்கொடுக்க ஒப்புக்கொண்டார். இந்த ஆலோசனைகள் மற்றும் 'எல்லோருக்கும் வெற்றி' அணுகுமுறையின் ஒரு பகுதியாக, முழு சமூகத்திற்கும் பயனளிக்கும் சமூகத்திற்கு சொந்தமான தீர்வாக தற்போது சேதமடைந்துள்ள நீர்ப்பாசனக் கால்வாயை சீரமைக்க ஒருமித்த சமூக கருத்து உருவானது.


FIRM இடமிருந்து கிடைத்த ஒரு சிறிய சமூக முன்முயற்சி மானியம் மற்றும் விவசாய அமைப்பின் பங்களிப்புகளைப் பயன்படுத்தி, கைவிடப்பட்ட நீர்ப்பாசனக் கால்வாயைத் தடுக்கும் அதிகப்படியான தாவரங்களை தோண்டுவதற்கு ஒரு எக்ஸ்கவேட்டர் இயந்திரம் பயன்படுத்தப்பட்டது, ஆக்கிரமிப்பு வேலியும் அகற்றப்பட்டது. மேலும், விவசாயிகளே தங்களது டிராக்டர்களை பயன்படுத்தி அப்புறப்படுத்தப்பட்ட மண் மற்றும் குப்பைகளை அகற்றி, பாசன நிலத்தை முழுமையாக சுத்தம் செய்தனர்.

இந்தச் செயல்பாடு சாதகமான பலனைத் தந்தது: வேலிக் கோடு அதன் அசல் நிலைக்குத் திரும்பியதன் மூலம், இயற்கையான நீர் ஓட்டம் மீண்டும் ஏற்படுத்தப்பட்டது, இது சபரிமுத்துவின் கட்டுப்பாட்டின் மூலம் அருகிலுள்ள விவசாயிகளின் நெல் சாகுபடிகளுக்கு சரியான நேரத்தில் மற்றும் போதுமான நீர்ப்பாசனத்தைப் பெற அனுமதிக்கிறது. ஏறக்குறைய பத்தாண்டு கால உள்ளூர் சமூகப் பிணக்கு தீர்ந்தது, மேலும் சேகரிக்கப்பட்ட வாய்க்கால் நீரை அடுத்த சாகுபடிக்கு பயன்படுத்தி, கிராம விவசாயிகளுக்கு நெல் சாகுபடி பரப்பை 70 முதல் 80 ஏக்கர் வரை அதிகரிக்க முடிந்தது.


சபரிமுத்துவும் விவசாயிகள் அமைப்பும் இந்த முடிவால் மகிழ்ச்சியடைந்தது மட்டுமல்லாமல், இந்த தீர்க்க முடியாத பிணக்கை இறுதியில் தீர்ப்பதில் பங்களித்த ADR திறன்முறையைப் பயன்படுத்திய இளைஞர்களுக்கு நன்றியையும் தெரிவித்தனர்.



[1] கருக்காகுளம் என்பது இலங்கையின்வடக்கு மாகாணத்தில் மன்னார்மாவட்டத்தில் உள்ள ஒருநாட்டுப்புற கிராமமாகும், அங்கு பலஇன மற்றும் பலகலாச்சார சமூகம் வாழ்கிறது. இவர்களில் பெரும்பாலானோர் நெல் விவசாயிகளாவர்.


[2]இங்கு ‘ADR’ என்பது, முறையானநீதிஅமைப்பின்ஈடுபாடுஇல்லாமல், சனசமூகஅளவிலானபிணக்குகள்/குறைகள்/முரண்பாடுகளைத்தீர்ப்பதற்குஉள்ளூர்செயற்பாட்டாளர்களால்இலகுபடுத்தப்பட்டமுறைசாராவழிமுறைகள்அல்லதுசெயல்முறைகளைக்குறிக்கிறது.

 
 
 

Komentáře


எமது செய்தி மடலுடன் இணையுங்கள்

SEDR இலிருந்து காலாண்டு இற்றைப்படுத்தல்களைப் பெறுவதற்குப் பதிவு செய்யுங்கள். சமீபத்திய பயிற்சிகள், CSO நடவடிக்கைகள் மற்றும் விசேட நிகழ்வுகள் பற்றி நாம் உங்களுக்கு அறிவிப்போம்.

 சமர்ப்பித்தமைக்கு நன்றி!

தொடர்பு

கொள்ளுங்கள்

எம்மிடம் வாருங்கள்

Supporting Effective Dispute Resolution

49, Alfred House Gardens

00300 Colombo,

Sri Lanka.

எமக்கு எழுதுங்கள்

சமூக ஊடகங்களில் எம்மைப் பின்தொடரவும்

  • Twitter
  • Facebook logo
LOGOs FInal-04.png

HOME          ABOUT           PARTNERS           IMPACT           RESOURCES          OPPORTUNITIES           CONTACT           PRIVACY   

This website was created and maintained with the financial support of the European Union. Its contents are the sole responsibility of the British Council and do not necessarily reflect the views of the European Union.

© 2021 by Supporting Effective Dispute Resolution, British Council

bottom of page