top of page

புதிய மலர்ச்சி: புதிய மலர்கள் மலரும் இடத்தில், நம்பிக்கை மலரும்

SEDR Team

1980களில் அனைத்து சமூகத்தினருக்கும் அடக்கம் செய்ய 3 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது, ஆனால் அப்போது ஜின்னா நகரில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்ததால் அது முஸ்லிம்களுக்கு சொந்தமான நிலமாக பயன்படுத்தப்பட்டது. 1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தை தொடர்ந்து பல முஸ்லீம்கள் இப்பகுதியை விட்டு வெளியேறிய பிறகு, ஏராளமான கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துக்கள் இங்கு குடியேறினர். 1985 இல், இந்த கிராமம் தஹயபுரம் என்று பெயர் மாற்றப்பட்டது. தமிழர்களும் கிறிஸ்தவர்களும் தங்கள் இறுதி சடங்குகளுக்கு 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மயான நிலத்திற்கு செல்ல வேண்டியிருந்த போதிலும், இப்போது அங்கு முஸ்லிம்கள் சிறுபான்மையினராக இருந்தாலும் கூட, அவர்கள் இன்னும் இந்த மயான நிலத்தை தங்கள் சொந்த நிலமாகவெ பயன்படுத்துகின்றனர். கிறிஸ்தவ மற்றும் தமிழ் சமூகத்தினர் தங்களது இறுதிச் சடங்குகளுக்கும் இந்த நிலத்தை நியாயமாகப் பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளதால் இது பல்வேறு சர்ச்சைகளுக்கு வழிவகுத்தது.


Active Citizens பயிற்சியின் மூலம் நாங்கள் பெற்ற அறிவு மற்றும் திறன்களின் அடிப்படையில், முதலில் சமூக அங்கத்தவர்கள், மதத் தலைவர்கள், மாகாண சபை அலுவலகம் மற்றும் கிராமத்தின் மூத்த குடிமக்களிடமிருந்து தேவையான தரவுகளை சேகரிப்பதில் நேரத்தை செலவிட்டோம். பிணக்கின் சிக்கலை நன்கு புரிந்துகொள்ள புத்தகங்கள் மற்றும் செய்தித்தாள்களிலிருந்து இரண்டாந்தரமான தரவு சேகரிக்கப்பட்டது. இந்த சமூகங்களுக்கிடையில் நல்லிணக்க உணர்வையும் அமைதியான சகவாழ்வையும் ஏற்படுத்துவதே எங்களின் முக்கிய நோக்கமாக இருந்தது. எனவே, நல்லிணக்கம் மற்றும் அமைதியான சகவாழ்வு பற்றிய உரையாடலை ஊக்குவிக்கும் வகையில் ஒரு சுதந்திர தின நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் பங்குபற்றிய SEDR Active Citizens பங்குபற்றியவர்கள் மற்றும் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் பாதிரியார், மூதூர் உள்ளூராட்சி மன்ற[1] உறுப்பினர்கள் மற்றும் நலன் விரும்பிகளும் உரை நிகழ்த்தினர். நமது சமூக நடவடிக்கை திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒற்றுமையின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் நாடக நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் பாதிக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சுமார் 147 பேர் கலந்துகொண்டனர்.

சமூகத் தலைவர்கள், மதத் தலைவர்கள் மற்றும் கிராமவாசிகளுக்கு இடையேயான தொடர்ச்சியான சந்திப்புகளுக்குப் பிறகு, இது பல்வேறு சமூகங்களின் உணர்வுகளை உள்ளடக்கிய ஒரு உணர்ச்சிகரமான பிரச்சினை என்பதையும் இதைத் தீர்க்க எதிர்பார்த்ததை விட அதிக நேரம் எடுக்கும் என்பது தெளிவாகியது. அடுத்த கட்டமாக, எங்கள் குழு உள்ளூர் சனசமூக மத்தியஸ்த சபையைச்[2] சந்தித்து அவர்களின் கருத்துகளையும் வழிகாட்டுதலையும் சேகரித்தது.


எவ்வாறாயினும், நிலப்பிணக்கைத் தீர்ப்பதில் ஒருமித்த கருத்தை எட்டுவது என்பது ஆரம்பத்தில் சாத்தியமற்றது என நிரூபிக்கப்பட்டதால், அதற்கு தீர்வு காண Muslim Aid திட்டக் குழுவிடம் கூடுதல் கால அவகாசம் கோருவதுடன், திட்டக்குழுவின் கள ஒருங்கிணைப்பாளர் Active Citizens உடன் இணைந்து சமரசத்தை எட்ட உதவுவதற்கு இவ்வாறான சிக்கல்களை தீர்ப்பதில் அவரது அனுபவத்தை பயன்படுத்துவார் என்பதையும் நாங்கள் முடிவு செய்தோம். இது பல ஆண்டுகளாகத் தொடரும் உணர்வுப்பூர்வமான பிரச்சினை என்பதால் இதைத் தீர்ப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. எமது குழுவினர், Muslim Aid இன் கள ஒருங்கிணைப்பாளருடன் இணைந்து, மீண்டும் மத்தியஸ்த சபையைச் சந்தித்தனர். அதன் பொது இந்தப் பிரச்சினை தீர்வு காண முடியாதது அல்ல என்றாலும் அதற்கு இன்னும் கால அவகாசம் தேவை என்று அவர்கள் தெரிவித்தனர். மதத் தலைவர்கள் கூட பங்கேற்கத் தயங்குவதைக் கண்டோம். எங்கள் இலக்குகளுடன் மக்களளை உடன்படுவதற்கு நிறைய உத்திகள் மற்றும் நம்பவைத்தல் தேவைப்பட்டது.


என் சிறுவயதில் இருந்தே, அமைதியைக் கட்டியெழுப்புவதில் சேவை செய்ய நான் விரும்பினேன். நான் ஒரு மாற்றத்தை உருவாக்க விரும்பினேன், அதற்காக நான் எனது கிராம மட்டத்தில் இருந்து தொடங்க வேண்டும் என்று நான் அறிவேன். அதற்கு இந்த திட்டம் எனக்கு பெரிதும் உதவியது. நான் சமீபத்தில் இந்த திட்டத்தை ஐக்கிய நாடுகள் சபையின் சமாதானத்தை கட்டியெழுப்பும் மாநாட்டில்[3] முன்வைத்து, மற்ற 25 திட்டங்களுக்கு மத்தியில் முதல் இடத்தைப் பெற்றேன். தேசிய அளவில் அமைதியைக் கட்டியெழுப்பும் ஆர்வலராக மாற இது என்னை ஊக்குவிக்கிறது.

தீர்க்க முடியாத பிணக்கு இல்லை என்பதையும் அறிந்தேன்; சரியான மூலங்களிலிருந்து தரவைப் பிரித்தெடுப்பதன் மூலம் மூல காரணத்தைக் கண்டறிவதே முக்கியமானது. பாதிக்கப்பட்ட தரப்பினர் உட்பட அனைவருக்கும் நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும். இத்தகைய சிக்கல்கள் உணர்திறன் கொண்டவை; எனவே, முடிவெடுப்பதில் நிறைய நேரம், உத்தி மற்றும் கடின உழைப்பு செலவழிக்க வேண்டும்.


[1] பிரதேச சபைகள் இலங்கையில் உள்ள மூன்றாம் நிலை நகராட்சிகளுக்கு தலைமை தாங்கும் உள்ளூராட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற அமைப்புகளாகும். [2] இலங்கை முழுவதும் 329 சமூக மத்தியஸ்த சபைகள் உள்ளன, இங்கு 8,400 க்கும் மேற்பட்ட நன்கு பயிற்சி பெற்ற தன்னார்வ மத்தியஸ்தர்கள் ஆர்வத்தை அடிப்படையாகக் கொண்ட மத்தியஸ்த அணுகுமுறைகளைப் பயன்படுத்தி உள்ளூர் சமூகங்களில் வருடத்திற்கு 200,000 க்கும் மேற்பட்ட பிணக்குகளைத்தீர்க்கின்றனர். [3] 2022 மே மாதத்தில் இலங்கையில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் சமாதானத்தை கட்டியெழுப்பும் மாநாடு.

Comments


எமது செய்தி மடலுடன் இணையுங்கள்

SEDR இலிருந்து காலாண்டு இற்றைப்படுத்தல்களைப் பெறுவதற்குப் பதிவு செய்யுங்கள். சமீபத்திய பயிற்சிகள், CSO நடவடிக்கைகள் மற்றும் விசேட நிகழ்வுகள் பற்றி நாம் உங்களுக்கு அறிவிப்போம்.

 சமர்ப்பித்தமைக்கு நன்றி!

தொடர்பு

கொள்ளுங்கள்

எம்மிடம் வாருங்கள்

Supporting Effective Dispute Resolution

19, 1/1, De Fonseka Place

00400 Colombo,

Sri Lanka.

எமக்கு எழுதுங்கள்

சமூக ஊடகங்களில் எம்மைப் பின்தொடரவும்

  • Twitter
  • Facebook logo
LOGOs FInal-04.png

HOME          ABOUT           PARTNERS           IMPACT           RESOURCES          OPPORTUNITIES           CONTACT           PRIVACY   

This website was created and maintained with the financial support of the European Union. Its contents are the sole responsibility of the British Council and do not necessarily reflect the views of the European Union.

© 2021 by Supporting Effective Dispute Resolution, British Council

bottom of page